Friday, November 26, 2010

எப்படியும் ஒருநாள் திரும்பி போறதுதானே

ஆறு பரப்பு காணிவித்து...
ஐந்து பரப்பு காணி வாங்கி...

அப்பப்பா வந்து ...
அடிக்கல் வைத்து...
அத்திவாரம் போட்டு ...

கருத்தகொளும்பான் மரத்திடியில் ...
கலரிந்து, அடுக்கி, தண்ணிவிட்டு ...

சுத்திச் சுவர் எழுப்பி - அதில
கதவு வச்சு ...
யன்னல் வச்சு - அதுக்கு
மழை பட கூடாது என்று - சன்செட்
முற்றத்தில போட்டிக்கோ ...

வெளிச்சுவர் இருக்க ...
உட்சுவர் பூசி...
ஊருக்கெல்லாம் சொல்லி - குடிபூரல் ....

வைரவர் கோயிலிருந்து - படம்
வழி நடையா கொண்டுவந்து ...
பெரிய மாமா தேங்காய் உடைக்க ...
பெரிய அறையில சாமிப்படம்...

தும்பிக்கை சரிபார்த்து - பிள்ளையார் படம் ...
துணைவி வள்ளி, மனைவி தெய்வானை, முருகன் ...
மூன்று பெரும் நிக்கிற ஒரு படம்...
முக்கியமா அவையால் இருக்கவேணும்!

இலச்சுமி படத்துக்கு ...
இலச்ச கணக்குல கண்டிஷன் - வீட்டில
தங்கம் குவியவேண்டும் என்று - காசெல்லாம்
தட்டில விழவேண்டும் - சிதறக்கூடாது ...

அத்திவாரம் போட்டு ...
ஆறு மாதத்தில் அடி வைத்தாலும் ...
ஆடு மாடு கட்ட என்று ...
அருகில ஒரு கொட்டில் ...

எல்லாரும் இப்படித்தான் வீடுகட்டுறது...
எல்லாம் கட்டி என்ன செய்தது - கடைசீல...
எவனோ திறத்த ஓடிவந்ததுதான்...
"எப்படியும் ஒருநாள் திரும்பி போறதுதானே"
எத்தனை காலம் போட்டு இப்படி சொல்லிச் சொல்லி...

இருபது வருஷம் தாண்டி...
இப்ப விடுகினமாம் ...
..................................
இன்னமும் எழுதவேணும் ...

6 comments:

Unknown said...

நல்லதொரு ஆக்கம்... தொடரட்டும்...

Vani said...

Superup...! nice anna

Unknown said...

Super... Nimalan

Sudar Nimalan said...

நன்றி ...

கிடுகுவேலி said...

நாங்கள் கரைதேடும் அலைகள்....!! தொடரட்டும் வாழ்த்துகள்...!!!

Sudar Nimalan said...

உண்மைதான்... நன்றிகள் ...